Monday, December 5, 2011

இருமுடியை தாங்கி வந்தேன்

இருமுடியை தாங்கி வந்தேன் இரக்கமில்லையா
இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா


                               சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
                               சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா


இருமுடியை தாங்கி வந்தேன் இரக்கமில்லையா
இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா

                             சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
                             சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா

அழுதையிலே குளித்து வந்தேன் அறியவில்லையா
அருகே கல் எடுத்து வைத்தேன் பார்க்கவில்லையா
2  (கரிமலையில் ஏறி வந்தேன் வந்தேன் கவனமில்லையா ) 2 
கருடன் என்னை கண்டதாக சொல்லவில்லையா


                           சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
                           சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா

பம்பையிலே குளித்து  வந்தேன் பார்க்கவில்லையா
பம்பா நதி போஜனமே அருந்தவில்லையா
2  ( பம்பையிலே விளக்கெடுத்தேன் பார்க்கவில்லையா ) 2 
பகவானே உனக்கு கூட சாட்சி தேவையா


                        சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
                        சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா

பதினெட்டு படிகள் ஏறி வரவுமில்லையா
படித்தேங்காய் உடைத்த  சத்தம் கேட்கவில்லையா
2  (கொடி மரத்தைச் சுற்றி வந்தேன் காணவில்லையா ) 2 


கூடி நின்ற ஜனங்களைப் போய் கேட்டு பாரய்யா

                    சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
                    சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா

நெய்யினாலே அபிஷேகம் செய்யவில்லையா
நெய் உருகி பாடியதும் கேட்கவில்லையா
ஐயா நின் சரணமென்றே கதரவில்லையா

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஐயா நின் சரணமென்றே கதரவில்லையா
அகிலமெல்லாம் காத்து அருளும் ஜோதி அல்லவா

                    2  (சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
                    சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா ) 2