Thursday, December 30, 2010

சபரிமலைக்கு செல்லும் வழி

சபரிமலைக்கு செல்லும் வழி :



  1. எரிமேலி ரூட்
  2. வண்டிபெரியார் ரூட் 




  1. எரிமேலி
  2. பேரூர் தோடு 
  3. காளைகட்டி 
  4. அழுதா
  5. அழுதா நதி
  6. கல்லிடும் குன்று 
  7. இஞ்சிப் பாறகோட்டை
  8. முக்குளி 
  9. கரியிலந்தோடு
  10. கரிமலை 
  11. பெரியன்னாவட்டம் 
  12. சிரியன்னாவட்டம் 
  13. பம்பா நதி

நாம் கடந்து செல்லும் பாதையின் முக்கியமான வழிநடைகள் :

  1. பேரூர் தோடு 
  2. காளைகட்டி
  3. அழுதா
  4. இஞ்சிப்பாறைகோட்டை
  5. கரிமலை
  6. பம்பா
  7. சபரிபீடம் 
  8. சரங்குத்தி
  9. பதினெட்டாம் படி 

படி ஏறியது ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும் கவனிக்க வேண்டியவை :

படி ஏறியதுமே ஐயப்ப பக்தர்களை வரவேற்ப்பது கொடி மரம். ஆம் 
அங்கே தத்வமஹி என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது . அந்த நூலினை 
சபரிமலைக்கு செல்லும் ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும் 
தவறாமல் பார்த்து படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 


        *** ஸ்வாமியே சரணம் ஐயப்பா ***

Monday, December 27, 2010

ஸ்ரீ தர்ம சாஸ்தா பாஹிமாம் ( பாடல் )

ஸ்வாமியே.....சரணம் ஐயப்பா...

2 (ஸ்ரீ தர்ம சாஸ்தா பாஹிமாம் 
ஜெய  சபரிஸா பாஹிமாம்
மணிகண்ட தேவா பாஹிமாம்
மாமலை வாஸா பாஹிமாம் )2

2 ( மோகினி சுதனே மோகன ரூபா
மோகமகற்றுக பாலனே )2
மண்டல காலமித வந்தல்லோ
மணிமாலையும் கழுத்தில் வீனல்லோ
என் மனசாகிலும் அலிஞ்சி போயல்லோ
என்னை காத்திடுக நீ ஐயப்பா

                        ---  ஸ்ரீ தர்ம சாஸ்தா பாஹிமாம்

வன்புலி முதுகில் கயரிய பகவான்
வண்ணல கயற்றுகன் யண்ணலே
நின் புண்ய நாமம் பாடுவோம்
ஸ்வாமியே... ஐயப்பா..
ஸ்வாமியே ... ஐயப்பா
நின் புண்ய நாமம் பாடுவோம்
நின் புண்ய நாமம் கேட்குமாம்
நின் பாத தரிசனம் காணுவோம்

               --- ஸ்ரீ தர்ம சாஸ்தா பாஹிமாம்

2 ( மண்டலத்தில் விருதங்கள் இருந்தோம்
ஒரு மனதார பூஜைகள் செய்தோம் ) 2
வந்தோம் வந்தோம் உனைக் காணவே
வந்தோம் வந்தோம் உனைக் காணவே
வரமருள்வாய்  நீ ஐயப்பா

           --- ஸ்ரீ தர்ம சாஸ்தா பாஹிமாம்

3 (மதகஜ வாகன மகாமதே
ஹரிஹர ச்சுனோ நமோஸ்துதே ) 3

2 ( ஏறாதமலைதனில் ஏறினோம் ) 2
நாங்கள் எட்டாத படிகளைத் தாண்டினேன்
வந்தோம் வந்தோம் உனைக் காணவே
வந்தோம் வந்தோம் உனைக் காணவே

2 ( வரமருள்வாய்  நீ ஐயப்பா ) 2

          --- ஸ்ரீ தர்ம சாஸ்தா பாஹிமாம் 

Sunday, December 26, 2010

ஐயனின் படி பாட்டு

ஓம் ஸ்ரீ சத்தியமான பொண்ணு பதினெட்டு படிகள்
ஓம்கார பொருள் உரைக்கும் ஐயப்பா..........
ஓம்கார ஸ்வரூபன் உன்னை
தரிசனம் காண வழி காட்டும்
சிங்காரத் திருபடிகளே...சரணம் ஐயப்பா...

ஸ்வாமியே...... சரணம் ஐயப்பா

ஒன்றாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் உள்ளம் சிலிர்க்குது ஐயப்பா
இரண்டாம் திருப்படி ஏறி வந்தோம் புது இன்பம் தோன்றுது ஐயப்பா
மூன்றாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் முன் வினை விலகுது ஐயப்பா
நான்காம் திருப்படி ஏறி வந்தோம் தல ஸ்தலங்கள் பெருகுது  ஐயப்பா

2  ( சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா )2

ஐந்தாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் ஐங்கரன் தம்பியே ஐயப்பா
ஆறாம் திருப்படி ஏறி வந்தோம் நீ ஆறுதல் தருவாய் ஐயப்பா
ஏழாம் திருப்படி ஏறி வந்தோம் என்றும் ஏழைகள் துணை நீ ஐயப்பா
எட்டாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் ஏகாந்த ரூபனே ஐயப்பா


2  ( சரணம் சரணம் ஐயப்பா 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா )2

ஒன்பதாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் ஓம்கார பொருளே ஐயப்பா
பத்தாம் திருப்படி ஏறி வந்தோம் பந்த பாசம் அகற்றிடு ஐயப்பா
பதினொன்னாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் பந்தள ராஜா ஐயப்பா 
பன்னிரண்டாம் திருப்படி ஏறி வந்தோம் உந்தன் பொன்னடி சரணம் ஐயப்பா

2  ( சரணம் சரணம் ஐயப்பா 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா )2

பதிமூன்றாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் பதியே மிதியே ஐயப்பா
பதினான்காம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் பார்வதி பாலா ஐயப்பா
பதினைந்தாம் திருப்படி ஏறி வந்தோம் கதியும் நீயே ஐயப்பா
பதினாறாம் திருப்படி ஏறி வந்தோம் எங்கள் பரமனின் மைந்தா ஐயப்பா

2  ( சரணம் சரணம் ஐயப்பா 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா )2

பதினேழாம் திருப்படி ஏறி வந்தோம் நீ பக்தியை தந்திடு ஐயப்பா
பதினெட்டாம் திருப்படி ஏறி வந்தோம் திவ்ய தரிசனம் தருவாய் ஐயப்பா 

2  ( சரணம் சரணம் ஐயப்பா 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா )2


Saturday, December 25, 2010

108 ஐயப்ப சரணங்கள்


  1. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 
  2. ஓம் ஹரிஹரசுதனே சரணம் ஐயப்பா 
  3. ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா 
  4. ஓம் சக்தி வடிவேலன் சோதரனே சரணம் ஐயப்பா 
  5. ஓம் மாளிகைபுறத்து மஞ்சம்மாதேவி லோகமாதாவே சரணம் ஐயப்பா 
  6. ஓம் வாவர் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 
  7. ஓம் கருப்பண்ண சரணம் ஐயப்பா 
  8. ஓம் பெரிய கடுத்த ஸ்வாமியே சரணம் ஐயப்பா 
  9. ஓம் சிறிய கடுத்த ஸ்வாமியே சரணம் ஐயப்பா
  10. ஓம் வனதேவத மாரே சரணம் ஐயப்பா 
  11. ஓம் துர்கா பகவதி மாரே சரணம் ஐயப்பா 
  12. ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா 
  13. ஓம் அனாத ரட்சகனே சரணம் ஐயப்பா 
  14. ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா 
  15. ஓம் அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா 
  16. ஓம் அம்பலத்தரசனே சரணம் ஐயப்பா 
  17. ஓம் அபயதாயகனே சரணம் ஐயப்பா 
  18. ஓம் அகந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா 
  19. ஓம் அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா 
  20. ஓம் அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா 
  21. ஓம் அழுதையில் வாஸனே சரணம் ஐயப்பா 
  22. ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா 
  23. ஓம் ஆபத்பாந்தவனே சரணம் ஐயப்பா 
  24. ஓம் ஆனந்த ஜோதியே சரணம் ஐயப்பா 
  25. ஓம் ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா 
  26. ஓம் ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா 
  27. ஓம் இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா 
  28. ஓம் இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 
  29. ஓம் இகபரசுக தாயகனே சரணம் ஐயப்பா 
  30. ஓம் இதய கமல வாஸனே சரணம் ஐயப்பா 
  31. ஓம் ஈடில்லா இன்பமளிப்பவனே சரணம் ஐயப்பா 
  32. ஓம் உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா 
  33. ஓம் ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா 
  34. ஓம் ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா 
  35. ஓம் ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா 
  36. ஓம் எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா 
  37. ஓம் எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா 
  38. ஓம் என்குல தெய்வமே சரணம் ஐயப்பா 
  39. ஓம் என் குருநாதனே சரணம் ஐயப்பா 
  40. ஓம் எரிமேலி வாழும் கிராத சாஸ்தாவே சரணம் ஐயப்பா 
  41. ஓம் எங்கும் நிறைந்த நாதப்ரம்மமே சரணம் ஐயப்பா 
  42. ஓம் எல்லோருக்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா 
  43. ஓம் ஏற்றுமானுரப்பன் மகனே சரணம் ஐயப்பா 
  44. ஓம் ஏகாந்த வாஸியே சரணம் ஐயப்பா 
  45. ஓம் எழைக்கருள்  புரியும் ஈசனே சரணம் ஐயப்பா 
  46.  ஓம் ஐந்துமலை வாஸனே சரணம் ஐயப்பா 
  47. ஓம் ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 
  48. ஓம் ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா 
  49. ஓம் ஓங்கார பரப்ருஹமமே சரணம் ஐயப்பா
  50. ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
  51. ஓம் கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
  52. ஓம் கம்பங்குடிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா
  53. ஓம் கருணா ஸமுத்ரமே சரணம் ஐயப்பா
  54. ஓம் கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா
  55. ஓம் சபரிகிரி வாஸனே சரணம் ஐயப்பா 
  56. ஓம் சத்ரு ஸம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா 
  57. ஓம் சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா 
  58. ஓம் சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா 
  59. ஓம் சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா 
  60. ஓம் சம்பு குமாரனே சரணம் ஐயப்பா 
  61. ஓம் சத்ய சொரூபனே சரணம் ஐயப்பா 
  62. ஓம் சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 
  63. ஓம் சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா 
  64. ஓம் சண்முக சோதரனே சரணம் ஐயப்பா 
  65. ஓம் தன்வந்திரி மூர்த்தியே சரணம் ஐயப்பா 
  66. ஓம் நம்பினோரைக் காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா 
  67. ஓம் நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா 
  68. ஓம் பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா 
  69. ஓம் பம்பை பாலகனே சரணம் ஐயப்பா 
  70. ஓம் பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா 
  71. ஓம் பக்தஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா 
  72. ஓம் பக்தவத்ஸவனே சரணம் ஐயப்பா 
  73. ஓம் பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா 
  74. ஓம் பம்பா வாஸனே சரணம் ஐயப்பா 
  75. ஓம் பரம தயாளனே சரணம் ஐயப்பா 
  76. ஓம் மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா 
  77. ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா 
  78. ஓம் வைக்கத்தப்பன் மகனே சரணம் ஐயப்பா 
  79. ஓம் கானக வாஸனே சரணம் ஐயப்பா 
  80. ஓம் குலத்துப்புழை பாலகனே சரணம் ஐயப்பா 
  81. ஓம் குருவாயூரப்பன்  மகனே சரணம் ஐயப்பா 
  82. ஓம் கைவல்யபத தாயகனே சரணம் ஐயப்பா 
  83. ஓம் ஜாதிமத பேதமில்லாதவனே சரணம் ஐயப்பா 
  84. ஓம் சிவசக்தி ஐக்ய சொரூபனே சரணம் ஐயப்பா 
  85. ஓம் ஸேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா 
  86. ஓம் துஸ்டர் பயன் நீக்குவோனே சரணம் ஐயப்பா 
  87. ஓம் தேவாதி தேவனே சரணம் ஐயப்பா 
  88. ஓம் தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா 
  89. ஓம் தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா 
  90. ஓம் நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா 
  91. ஓம் நெய்யபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா 
  92. ஓம் ப்ரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா  
  93. ஓம் பாப ஸம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா 
  94. ஓம் பாயசான்ன ப்ரியனே சரணம் ஐயப்பா 
  95. ஓம் வன்புலி வாஹனனே சரணம் ஐயப்பா 
  96. ஓம் வரப்ர தாயகனே சரணம் ஐயப்பா 
  97. ஓம் பாகவதோத்தமனே சரணம் ஐயப்பா 
  98. ஓம் பொன்னம்பல வாஸனே சரணம் ஐயப்பா 
  99. ஓம் மோகினி ஸீதனே சரணம் ஐயப்பா 
  100. ஓம் மோகன ரூபனே சரணம் ஐயப்பா 
  101. ஓம் வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா 
  102. ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா 
  103. ஓம் ஸத்குரு நாதனே சரணம் ஐயப்பா 
  104. ஓம் ஸர்வ ரோக நிவாரகனே சரணம் ஐயப்பா 
  105. ஓம் ஸச்சிதானந்த சொரூபனே சரணம் ஐயப்பா 
  106. ஓம் ஸர்வாபீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா 
  107. ஓம் சாச்வதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா 
  108. ஓம் பதினெட்டாம்படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா 


காத்து ரட்சிக்கனும் பகவானே சரணம் ஐயப்பா 
மலையேற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா 
படியேற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா 
திவ்ய தரிசனம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா 
என்றும் மறவா வரம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா 


அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் 
செய்த ஸகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து ரட்சிக்க வேண்டும்.
ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிமேல் வாழும் வில்லன் 
வில்லாளி வீரன் , வீர மணிகண்டன் , காசி ராமேஸ்வரம் , 
பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் என் ஓம் ஹரிஹரசுதன் 
கலியுக வரதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ....  

சலாம் அலேக்கும் வாவரே ( வாவர் பாடல் )

சலாம் அலேக்கும் வாவரே  சலாம் அலேக்கும்
சலாம் அலேக்கும் வாவரே  சலாம் அலேக்கும்

வாவரையா வாவரையா வாரும் ஐயா
வாவரையா வாவரையா வாரும் ஐயா

வாவரையா வாவரையா வாரும் ஐயா
அவர் வில்லாளி வீரனின் தோழரய்யா

அல்லா நாமம் சொன்ன வாவரையா
அவர் அரபியிலே  பிறந்த வாவரையா

கடற் கூட்ட தலைவரே வாவரையா
ஐயனுடன் போரிட்ட வாவரையா

சாஸ்தாவிடம் சரணடைந்த வாவரையா
சபரி வாஸன் தோழரே வாவரையா

இஞ்சிப்பாறை கோட்டையிலே வாவரையா
முண்டனை வென்று வந்த வாவரையா

எரிமேலி பேட்டைத் துள்ள வாவரையா
முதலில் உன்னையே தொழுதிடுவோம் வாவரையா

சர்க்கரை மிளகும் தந்திடுவாயே
தர்காவில் உன்னைத் தொழுபவர்க்கே

மாதவனின் மைந்தனை வாவரையா
காண எங்களோடு வந்திடுவாய் வாவரையா

சபரிமலைக் கோயிலிலே வாவரையா
உன் சன்னதியை தொழுதிடுவோம் வாவரையா



சலாம் அலேக்கும் வாவரே  சலாம் அலேக்கும் 
சலாம் அலேக்கும் வாவரே  சலாம் அலேக்கும் 

லாஹி லாஹி இல்லல்லோ ( வாவர் பாடல் )

லாஹி லாஹி இல்லல்லோ
வாவர்சாமி ஊரல்லோ
எரிமேலிப்பேட்டை வந்தல்லோ
கரும்புள்ளி செம்புள்ளியிட்டல்லோ

                            --- லாஹி லாஹி இல்லல்லோ

எரிமேலி நாங்கள் வந்திடுவோம்
பேட்டைத்துள்ளி ஆடிடுவோம்
2 ( வாவர் ஸ்வாமி திந்தகத்தோம்
ஐயப்ப ஸ்வாமி திந்தகத்தோம் )2

                           --- லாஹி லாஹி இல்லல்லோ

மணிகண்டன் நண்பர் ஆனவரே
மாமலை மாமணி ஆனவரே
அஞ்சா நெஞ்சம் கொண்டவரே
அல்லாவின் இறையடி சென்றவரே

                         --- லாஹி லாஹி இல்லல்லோ

சபரிமலைக்கு சென்றிடுவோம் 
வாவரின் தோழரைக் கண்டிடுவோம் 
சர்க்கரை மிளகும் பெற்றிடுவோம்
சரணம் சொல்லி அழைத்திடுவோம் 

                       --- லாஹி லாஹி இல்லல்லோ

சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே ( பாடல் )

சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே - இங்கே
வரணுமப்பா வரணுமப்பா ஸ்வாமியே

நெற்றியிலே நீரணிந்து நீல ஆடை தாங்கிக்கொண்டு
சுற்றி வந்து ஐயன் பாதம் தேடினேன் - ஐயப்போ
நான் சபரிமலை தன்னை நோக்கி ஓடினேன் - ஐயப்போ

                                 --- சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே

பாவக்கடலை கடந்து சென்று பரமனடி சேர்ந்திடவே
தவக்கோலம் துளசிமாலை தாங்கினேன் - நான்
தரணியிலே உன் புகழை பாடினேன் - ஐயப்போ

                                --- சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே

2 ( சாமி திந்தக தோம் - ஐயப்ப திந்தக  தோம் ) 2

சரமெடுத்து தீர்த்தமாடி , ஆட்டமாடி, பாட்டுபாடி
பேட்டையிலே துள்ளும் போது ஸ்வாமியே - அங்கே
பேரானந்தம் பேரானந்தம் ஐயனே - ஐயப்போ

                               --- சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே

இருமுடியைத் தாங்கி கொண்டு பெருவழியில் நடக்கும் போது
கரிமலையில் கதறுகிறேன் ஐயனே
எங்களை காத்தருள வேண்டுமய்யா - மெய்யனே

                                 --- சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே

பாவனமாம் பம்பாநதி பாலகனே உன்னை நம்பி
பாட்டுபாட பாவவினை போகுதே - ஐயப்போ
பக்தியோடு கை உன்னை கும்பிடுதே - ஐயப்போ

                              --- சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே 

ஆறுவார நோன்பிருந்து பதினெட்டு படிகளேறி
ஆரவார கூட்டத்துக்கு நடுவிலே - நாங்கள்
ஆனந்தமாய் தரிசனமும் காண்போமே - ஐயப்போ

                             --- சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே

Friday, December 24, 2010

சரணம் சரணம் ஐயப்பா ( பாடல் )



சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

கலியுக ஈசா கானகவாசா சரணம் சரணம் ஐயப்பா
சுந்தர ரூபா சுகுண விலாசா சரணம் சரணம் ஐயப்பா

                                                 --- சரணம் சரணம் ஐயப்பா

மாமலைவாசா மகிஷிமர்த்தனா சரணம் சரணம் ஐயப்பா
மோகினி பாலா மோகனரூபா சரணம் சரணம் ஐயப்பா

                                                --- சரணம் சரணம் ஐயப்பா

பந்தள குந்தள ஸிந்தர சந்திரா சரணம் சரணம் ஐயப்பா
பாரினை காக்கும் பரமதயாளா சரணம் சரணம் ஐயப்பா
                                             

                                               --- சரணம் சரணம் ஐயப்பா

இருமுடி தாங்கி சபரி வருவோம் சரணம் சரணம் ஐயப்பா

சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
                                            

                                              --- சரணம் சரணம் ஐயப்பா

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சரணம் சரணம் ஐயப்பா

தேக பலம்தா பாத பலம்தா சரணம் சரணம் ஐயப்பா


சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

அழைத்திடுவோம் ஸ்வாமி ( பாடல் )

அழைத்திடுவோம் ஸ்வாமி அழைத்திடுவோம்
ஹரிஹரசுதனை அழைத்திடுவோம்

வில்லாளி வீரன் அவன் வீரமணி கண்டன் அவன்
மோஹினி பாலனை அழைத்திடுவோம் - அந்த 
மோஹினி பாலனை அழைத்திடுவோம்

                                      ----  அழைத்திடுவோம் ஸ்வாமி

2 ( வண்ணமயில் வாகன வடிவேலன்
அவன் தம்பியான சிவபாலன் )2

                                     ----  அழைத்திடுவோம் ஸ்வாமி

ஐந்து மலையின் யுவராஜன் - அந்த
சபரியில் வாழும் மகராஜன்
மதகஜ வாகன மாவீரன் - அவன்
மாமலை வாழும் மணிகண்டன்

                                      ----  அழைத்திடுவோம் ஸ்வாமி 

2 ( வந்திடுவான் அவன் வந்திடுவான்
வன்புலிமேலே வந்திடுவான் )2

                                     ----  அழைத்திடுவோம் ஸ்வாமி

அச்சன்கோவில் அரசனவன் - அந்த
ஆரியங்காவு ஐயன் அவன்
குளத்துப்புழையின்  பாலனவன் - எங்கள்
குலத்தை காக்கும் தெய்வமவன்

                                   ----  அழைத்திடுவோம் ஸ்வாமி 

சரணம் அம்மா தாயே சரணம் ( பாடல் )

சரணம்  அம்மா தாயே சரணம் அம்மா 
சரணம்  அம்மா தாயே சரணம் அம்மா

மூகாம்பிகை அம்மா தாயே சரணம் அம்மா
மூகாம்பிகை அம்மா தாயே சரணம் அம்மா

வரணும் அம்மா தாயே வரணும் அம்மா
வரணும் அம்மா தாயே வரணும் அம்மா

கொல்லூரில் கோயில் கொண்ட தாயே அம்மா
எங்கள் குறைகள் பல தீர்த்திடுவாய் நீயே அம்மா

முப்பெரும் தேவியும் நீயே அம்மா
மும்மூர்த்தி வடிவாய் நீயே அம்மா

கொஞ்சம் சலங்க்கையோடு வந்தாயம்மா
சங்கரனைக் கண்டவுடன் நின்றாயம்மா

சோட்டானிக் கரையினில் நீயே அம்மா
கருங்கல்லில் காண்பதுன் வடிவே அம்மா 

சகலசக்தி பெற்றவளே தாயே அம்மா
சகல சுகம் தந்திடுவாய் நீயே அம்மா

சரணம்  அம்மா தாயே சரணம் அம்மா  
சரணம்  அம்மா தாயே சரணம் அம்மா 

ஆட்டம் என்ன பாட்டு என்ன முருகையா ( பாடல் )

ஆட்டம் என்ன பாட்டு என்ன முருகையா - நீ
ஆடி வரும் அழகென்ன வேலய்யா

பரமசிவபாலனான முருகையா - நீ
பழத்திற்காக போட்டியிட்ட தேனய்யா

பழனிமலை கோவிலிலே முருகையா - நீ
ஆண்டியாக கோலம் கொண்ட வேலய்யா

பழமுதிர்ச் சோலையிலே முருகையா - நீ
ஒளவைக்கு காட்சி தந்த வேலய்யா

திருச்செந்தூர் கோவிலிலே முருகையா - நீ
சூரனை வென்று நின்ற வேலய்யா

திருத்தணிகை மலையினிலே முருகையா - நீ
சினம் தணிந்து நின்று விட்ட வேலய்யா

ஸ்வாமிமலை கோவிலிலே முருகையா - நீ
தகப்பனுக்கு பாடம் சொன்ன வேலய்யா

திருப்பரங்குன்றினிலே முருகையா - நீ
தெய்வயானை கரம் பிடித்த வேலய்யா

வள்ளிக்கு மாலையிட்ட முருகையா - நீ
கிழவனா கோலம் கொண்ட தேனய்யா

ஏறுமயில் ஏறவேண்டும் முருகையா - நீ
எல்லோரையும் காக்க வேண்டும் வேலய்யா


ஆட்டம் என்ன பாட்டு என்ன முருகையா - நீ
ஆடி வரும் அழகென்ன வேலய்யா

அரோகரா முருகா அரோகரா ( பாடல் )

அரோகரா முருகா அரோகரா

அரோகரா முருகா அரோகரா 

ஆறுமுக தெய்வத்திற்கு அரோகரா 
எங்களை ஆதரிக்கும் தெய்வத்திற்கு அரோகரா 

பரமசிவன் பாலனுக்கு அரோகரா
பன்னிருகை கொண்டவர்க்கு அரோகரா

சக்தி வடிவேலனுக்கு அரோகரா
சஞ்சலங்கள் தீர்ப்பவர்க்கு அரோகரா

சண்முகவேல் தெய்வத்திற்கு அரோகரா 
சங்கடங்கள் தீர்ப்பவர்க்கு அரோகரா

வழி காட்டும் தெய்வத்திற்கு அரோகரா 
வழித்துணையாய் வருபவர்க்கு அரோகரா 

கந்தபுரி கந்தனுக்கு அரோகரா 
கல்விச் செல்வம் தருபவர்க்கு அரோகரா 

நன்மை எல்லாம் தருபவர்க்கு அரோகரா 
நன்மை எல்லாம் காப்பவர்க்கு அரோகரா 

                                -------   அரோகரா முருகா அரோகரா 



ஜெயகணேச ஜெயகணேச ( பாடல் )

ஜெயகணேச ஜெயகணேச ஜெயகணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷமாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய ரக்ஷமாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷமாம்

கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷமாம்

ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ரக்ஷமாம்

மஹாலஷ்மி மஹாலஷ்மி மஹாலஷ்மி பாஹிமாம்
ஸ்ரீ தேவி  ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ரக்ஷமாம்

பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மகாசக்தி மகாசக்தி மகாசக்தி ரக்ஷமாம்

ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம்
ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி ரக்ஷமாம்

ஓம்சிவாய ஓம்சிவாய ஓம்சிவாய பாஹிமாம்
ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ரக்ஷமாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீசா சபரிகிரீசா சபரிகிரீசா ரக்ஷமாம்

ஜெயராமா   ஜெயராமா   ஜெயராமா   பாஹிமாம்
ஸ்ரீ ராமா ஸ்ரீ ராமா ஸ்ரீ ராமா ரக்ஷமாம்

ஆஞ்சனேய ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம்

                                          ------  ஜெயகணேச ஜெயகணேச

Tuesday, December 21, 2010

ஆனை அலையுற நீலிமல ( பாடல் )



ஆனை அலையுற நீலிமல..! நம்ம ஐயப்பனோட சாமிமல..!
ஏறிவருகிற தந்தானா தந்தானா
ஐயப்பமார்களை தந்தானா தந்தானா
ஏறிவருகிற ஐயப்பமார்களை ஏத்தி விடுற  சபரிமல!
ஐயப்பன தொழுவோம்! கோயிலுக்கு வருவோம்!

சாமியப்பா சரணமப்பா பம்பா வாசனே சரணமப்பா!
சாமியப்பா சரணமப்பா பந்தள பாசனே சரணமப்பா! 



                               ---- ஆனை அலையுற நீலிமல


வீட்டில நாட்டில காட்டில மேட்டில பாட்டில வாழும் பகவானே!
நல்ல தவத்தில உள்ள மனத்தில தோற்றி வணங்க வருவோனே!
கேட்ட வரங்களை நாட்டு நலங்களை காத்து இருந்து தருவோனே!

சாமி திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!
ஐயப்பன் திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!



                              ---- ஆனை அலையுற நீலிமல

உன்திரு நாமத்தை சொல்லிய பேருக்கு துன்பங்க என்னைக்கும் தொடாது!
பண்ணின பாவங்க பந்தள பாசனின் பார்வையில் பட படராது!
எண்ணின நன்மைங்க எப்போதும் தொலங்கும் என்னைக்குமே அது மாறாது!

சாமி திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!
ஐயப்பன் திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!



                           ---- ஆனை அலையுற நீலிமல



Monday, December 20, 2010

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் ( பாடல் )

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் 

                                                       (குன்றத்திலே)

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்கள் ஆனந்த மன்றம்
தங்கம் வைரம் பவளம் முத்து தவளும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை 

                                                    (குன்றத்திலே)

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
வேல் முருகா! வெற்றி வேல் முருகா!
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல்! முருகனுக்கு வேல் வேல்!

                                                (குன்றத்திலே)


Friday, December 17, 2010

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரனி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ 
ஜகத்காரனி நீ பரிபூரணி நீ 

சதுர வேதங்களும் பஞ்ச பூதங்களும் 
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் 
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் 
தொழும்பூங்க்க் கழலே மலை மாமகளே 

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ 
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ 
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ 
 ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ 
ஜகத்காரனி  நீ பரிபூரணி நீ   

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த 
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே 
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் 
பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள் 

சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ 
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ 
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ 
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ 
ஜகத்காரனி நீ பரிபூரணி நீ 



கற்பூர நாயகியே

கற்பூர  நாயகியே .! கனகவல்லி ,
காலி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா
விற்கோல வேதவல்லி விசாலாட்சி
விழிகோல மாமதுரை மீனாட்சி
சொற்கோவில் நானமைத்தேன் இங்கே தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே

                                    ----   கற்பூர  நாயகியே

புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி
நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி
உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி
உன்னடிமைச் சிறியோனை நீ ஆதரி 

                                  ----   கற்பூர  நாயகியே

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன் தாயே..! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா
கண்ணீரை துடைத்துவிட ஒடிவாம்மா
காத்திருக்க வைத்திருத்தல் சரியோ அம்மா
சின்னவளின் குரல் கேட்டு முகம் திருப்பு
சிரித்தபடி என்னை தினம் வழியனுப்பு

                                 ----   கற்பூர  நாயகியே

கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்
பண்ணமைக்கும் நா உன்னையே பாட வேண்டும்
பக்தியோடு கை உன்னையே கூட வேண்டும்
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்
மண்ணளக்கும் சமயபுரம் மாரியம்மா
மக்களுடைய குறைகளையும் தீருமம்மா

                               ----   கற்பூர  நாயகியே

நெற்றியிலே குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சில் உன் திருநாமம் வழிய வேண்டும்
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்
சுற்றமெல்லாம் நீடூழி வாழ வேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்
மற்றதெல்லாம் நான் உனக்குச்   சொல்லலாமா..
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா

                             ----   கற்பூர  நாயகியே

அன்னைக்கு உபகாரம் செய்வதுண்டா
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டா
கண்ணுக்கு இமையின்று காவலுண்டோ
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ
எண்ணைக்கும் விளக்குக்கும் பேத முண்டோ
என்றைக்கும் நான் உந்தன் பிள்ளையன்றோ

                            ----   கற்பூர  நாயகியே

அன்புக்கே நான் அடிமை ஆக வேண்டும்
அறிவுக்கே என் காத்து கேட்க வேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நானென்றும் வாழ வேண்டும்

                          ----   கற்பூர  நாயகியே

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை
செம்பவள வாயழகி உன் எழிலோ
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை
அம்பளவு விழியாளே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை

                        ----   கற்பூர  நாயகியே

காற்றாகி கனலாகி கடலாகினாய்
கருவாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகி பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை

                       ----   கற்பூர  நாயகியே
                          

Thursday, December 16, 2010

வர வேண்டும்... வர வேண்டும்...



வர வேண்டும் வர வேண்டும் பரமேஸ்வரி – வரம்
தர வேண்டும் தர வேண்டும் ஜகதீஸ்வரி! 

(வர வேண்டும்)

பரம் என்று உனை அடைந்தேன்
ஒரு வரம் தா – என்றன்
சிரம் தனில் பதம் பதித்து
திரு வரம் தா! 

(வர வேண்டும்)

திருவடி நினை வொன்றே
நொடி தொறும் வேண்டும் – உன்
நினைவினில் தினம் திளைத்து
மகிழ் வரம் வேண்டும்!

மறுபடி மறுபடி 
பிறந்தாலும் உனையே
சரண் என்று அடைந்திடும்
சுக வரம் வேண்டும்!

(வர வேண்டும்)


சிவன் பாதியள்



அரியாசனத்தினில் அரனுடன் அமர்ந்து
சரியாசனம் செய்யும் அம்பிகையே!
அரவாசனத்தினில் துயில் கொண்டிருக்கும்
அரியுடை அன்புச் சோதரியே!

இந்திரன் முதலாம் தேவர்கள் யாவரும்
பணிந்திடத் திகழ்ந்திடும் தாமரையே!
சந்திர னைமுடி சூடிய இறையுடன்
வந்தெமைக் காத்திடு தாரகையே!

அருமறைகளும் தினம் போற்றிடும் துதித்திடும்
நாயகியே எங்கள் நான்முகியே!
திருமுறைகளின் அருந் தலைவனை அணையும்
சாம்பவியே எழில் சங்கரியே!

பவமதை ஒழித்திடு தவமதை நல்கிடு
நாரணியே எங்கள் பூரணியே!
எமதுள்ளம் உறைந்திடு நிறைந்தங்கு ஒளிர்ந்திடு
சோதியளே சிவன் பாதியளே!!

உன்னையன்றி எவருமில்லை...



உன்னையன்றி எவருமில்லை
உள்ளந்தன்னில் திறனுமில்லை
முள்ளிலிட்ட சேலை போலே
நானும் ஆகினேன் – அம்மா
உள்ளிருக்கும் உன்னைத் தேடி
கானம் பாடினேன்

உன்னைப் பாடும் பாடல் எல்லாம்
காற்றில் கரைந்து போகுதோ?
இல்லை யுன்னைத் தேடி வந்துன்
பாத மலரில் சேருதோ?

என்றன் கண்ணின் ஈரம் என்று
உன்னை வந்து நனைக்குமோ?
உன்றன் அன்பின் ஈரம் என்று
என்னை வந்து அணைக்குமோ?

ஏதும் அறி யாத பிள்ளை
உன்மடி யைத் தேடுது
பாதம் பற்றிக் கொண்டு நீயே
சொந்தம் என்றுபாடுது!

உன் அன்பொன்றே வேண்டும்..!



மனிதரும் வலிதரும் யாதொன்றும் வேண்டாம்
அம்மாஉன் அன்பொன்றே வேண்டும்
களிதரும் கன்னியே என்னுள்ளே நீயே
என்றென்றும் ஒளிவீச வேண்டும்

பனிதரும் பிறைசூடன் இடப்பாகம் கொண்டாய்
அவனுக்குன் வலப்பாகம் தந்தாய்
ஆதியே பரமனில் பாதியாய் ஆனாய்
சோதியென ஒன்றாகி நின்றாய்

நஞ்சுண்ட சிவனையே கருநீல கண்டனாய்
ஆக்கியே காத்திட்டாய் அம்மா
வினையென்னும் உரவினை உண்டுண்டு வீழ்ந்தேன்
எனையும்நீ காக்கவே வேண்டும்

என்இதயக் கோவிலில் நீஇருக்க வேண்டும்
உன்னைத்தினம் பூஜிக்க வேண்டும்
பண்பாடி புகழ்பாடி அருள்நாடி அதுவே
வாழ்வெனவே வாழ்ந்திருக்க வேண்டும்!

தெரிந்தும் தெரியாமலும்

தெரிந்தும் தெரியாமலும்
அறிந்தும் அறியாமலும்
செய்த சகல குற்றங்களையும்
பொறுத்துக் காத்து ரட்சித்து
அருள் புரிய வேண்டும்

ஓம் சத்தியமாய் பொன்னு
பதினெட்டாம் படிமேல் வீற்றிருக்கும்
ஓம் ஹரி ஹர சுதன்
ஆனந்த சித்தன்
ஐயன் ஐயப்ப
சுவாமியே சரணம் ஐயப்பா
  

மங்களம்

சபரி மலை வாழும் எங்கள்
தலைவனுக்கு மங்களம்

தவ முனிவர் வணங்கும்
அந்த சந்நிதிக்கு மங்களம்
                இப முகவன் முருகோனுக்கும்
                இளையோனுக்கும் மங்களம்

இன்ப மெல்லாம் தந்தருளும்
இறைவனுக்கு மங்களம்
                புவி மிசையே பவனி வரும்
                புனிதனுக்கும் மங்களம்

புவி மயங்கும் மோகினியாள்
புதல்வனுக்கு மங்களம்
                பக்தி மலை ஏறுகின்ற
                பக்தருக்கு மங்களம்

பகவான் நாமம் கூறுகின்ற
அனைவருக்கும் மங்களம்
                மங்களம் மங்களம் சுப மங்களம்
                மங்களம் மங்களம் ஜெய மங்களம்

ஹரிவராசனம்

சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா

ஹரிவராசனம் விஸ்வ மோஹனம்
ஹரித தீஸ்வரம் ஆராத்ய பாதுகம்
ஹரி விமர்த்தனம் நித்ய நரத்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                (சரணம்)
சரண கீர்தனம் சக்த மானஸம்
பரண லோலுபம் நர்த்தனா லயம்
அருண பாஸ¤ரம் பூத நாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
ப்ரணய சத்யகா பிராண நாயகம்
ப்ரணத கல்பகம் சுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
துரஹ வாஹனம் சுந்தரானனம்
வரக தாயுதம் வேதவர்ணிதம்
குரு க்ருபாகரம் கிர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
த்ரிபுவனார்ச் சிதம் தேவ தாத்மகம்
த்ரிநயனப் பிரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்திதப் பிரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
பவபயாபஹம் பாவுகாவுஹம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
கலம்ரு துஸ்மிதம் சுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோஹனம்
களப கேஸரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
ச்ரிதனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோஹரம் கீதலாலயம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா