சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே - இங்கே
வரணுமப்பா வரணுமப்பா ஸ்வாமியே
நெற்றியிலே நீரணிந்து நீல ஆடை தாங்கிக்கொண்டு
சுற்றி வந்து ஐயன் பாதம் தேடினேன் - ஐயப்போ
நான் சபரிமலை தன்னை நோக்கி ஓடினேன் - ஐயப்போ
--- சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே
பாவக்கடலை கடந்து சென்று பரமனடி சேர்ந்திடவே
தவக்கோலம் துளசிமாலை தாங்கினேன் - நான்
தரணியிலே உன் புகழை பாடினேன் - ஐயப்போ
--- சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே
2 ( சாமி திந்தக தோம் - ஐயப்ப திந்தக தோம் ) 2
சரமெடுத்து தீர்த்தமாடி , ஆட்டமாடி, பாட்டுபாடி
பேட்டையிலே துள்ளும் போது ஸ்வாமியே - அங்கே
பேரானந்தம் பேரானந்தம் ஐயனே - ஐயப்போ
--- சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே
இருமுடியைத் தாங்கி கொண்டு பெருவழியில் நடக்கும் போது
கரிமலையில் கதறுகிறேன் ஐயனே
எங்களை காத்தருள வேண்டுமய்யா - மெய்யனே
--- சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே
பாவனமாம் பம்பாநதி பாலகனே உன்னை நம்பி
பாட்டுபாட பாவவினை போகுதே - ஐயப்போ
பக்தியோடு கை உன்னை கும்பிடுதே - ஐயப்போ
--- சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே
ஆறுவார நோன்பிருந்து பதினெட்டு படிகளேறி
ஆரவார கூட்டத்துக்கு நடுவிலே - நாங்கள்
ஆனந்தமாய் தரிசனமும் காண்போமே - ஐயப்போ
--- சரணமப்பா சரணமப்பா ஸ்வாமியே
No comments:
Post a Comment