Tuesday, December 21, 2010
ஆனை அலையுற நீலிமல ( பாடல் )
ஆனை அலையுற நீலிமல..! நம்ம ஐயப்பனோட சாமிமல..!
ஏறிவருகிற தந்தானா தந்தானா
ஐயப்பமார்களை தந்தானா தந்தானா
ஏறிவருகிற ஐயப்பமார்களை ஏத்தி விடுற சபரிமல!
ஐயப்பன தொழுவோம்! கோயிலுக்கு வருவோம்!
சாமியப்பா சரணமப்பா பம்பா வாசனே சரணமப்பா!
சாமியப்பா சரணமப்பா பந்தள பாசனே சரணமப்பா!
---- ஆனை அலையுற நீலிமல
வீட்டில நாட்டில காட்டில மேட்டில பாட்டில வாழும் பகவானே!
நல்ல தவத்தில உள்ள மனத்தில தோற்றி வணங்க வருவோனே!
கேட்ட வரங்களை நாட்டு நலங்களை காத்து இருந்து தருவோனே!
சாமி திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!
ஐயப்பன் திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!
---- ஆனை அலையுற நீலிமல
உன்திரு நாமத்தை சொல்லிய பேருக்கு துன்பங்க என்னைக்கும் தொடாது!
பண்ணின பாவங்க பந்தள பாசனின் பார்வையில் பட படராது!
எண்ணின நன்மைங்க எப்போதும் தொலங்கும் என்னைக்குமே அது மாறாது!
சாமி திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!
ஐயப்பன் திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!
---- ஆனை அலையுற நீலிமல
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment