ஆடி வரும் அழகென்ன வேலய்யா
பரமசிவபாலனான முருகையா - நீ
பழத்திற்காக போட்டியிட்ட தேனய்யா
பழனிமலை கோவிலிலே முருகையா - நீ
ஆண்டியாக கோலம் கொண்ட வேலய்யா
பழமுதிர்ச் சோலையிலே முருகையா - நீ
ஒளவைக்கு காட்சி தந்த வேலய்யா
திருச்செந்தூர் கோவிலிலே முருகையா - நீ
சூரனை வென்று நின்ற வேலய்யா
திருத்தணிகை மலையினிலே முருகையா - நீ
சினம் தணிந்து நின்று விட்ட வேலய்யா
ஸ்வாமிமலை கோவிலிலே முருகையா - நீ
தகப்பனுக்கு பாடம் சொன்ன வேலய்யா
திருப்பரங்குன்றினிலே முருகையா - நீ
தெய்வயானை கரம் பிடித்த வேலய்யா
வள்ளிக்கு மாலையிட்ட முருகையா - நீ
கிழவனா கோலம் கொண்ட தேனய்யா
ஏறுமயில் ஏறவேண்டும் முருகையா - நீ
எல்லோரையும் காக்க வேண்டும் வேலய்யா
ஆட்டம் என்ன பாட்டு என்ன முருகையா - நீ
ஆடி வரும் அழகென்ன வேலய்யா
No comments:
Post a Comment