ஆடுமயிலே விளையாடு மயிலே
ஆனந்த மாய் தோகை
விரித்தாடு மயிலே
(ஆடு)
சபரிப் பயணம் எண்ணி
ஆடுமயிலே - நீயும் சந்தோஷமாய்த்
துள்ளி துள்ளி ஆடுமயிலே
குருபூஜை கண்டு கண்டு
ஆடுமயிலே - எங்கள் குற்றங்குறை
நீங்க நீயும் ஆடுமயிலே
இருமுடியை கண்டு கண்டு
ஆடுமயிலே - அது இன்னும் இன்னும்
சேர்ந்து வர ஆடுமயிலே
(ஆடு)
குருவாயூரப்பன் முன்னே வந்து
ஆடுமயிலே - நல்ல குமரன்
பிறக்க நீயும் ஆடுமயிலே
எரிமேலி பெட்டை துள்ளி
ஆடுமயிலே - அங்கு குருவான
சாஸ்தா முன்னே ஆடுமயிலே
வாபரின் சந்நிதி முன்
ஆடுமயிலே - அவர் வனத்தில்
துனை வரவே ஆடுமயிலே
(ஆடு)
கரிவலந்தோட்டில் நின்று
ஆடுமயிலே - காளை கட்டி
மேடை நின்று ஆடுமயிலே
அழுதா நதி நின்று
ஆடுமயிலே - அங்கு ஆனந்தமாய்
நீராடி ஆடுமயிலே
கரிமலை ஏற்றம் ஏறி
ஆடுமயிலே - அந்தக் கரிமலை
இற்க்கத்திலும் ஆடுமயிலே
(ஆடு)
பம்பை நதி சுகம் கண்டு
ஆடுமயிலே - அந்தக் கங்கை
நதி சோலையிலும் ஆடுமயிலே
நீலிமலை எற்றத்திலும்
ஆடுமயிலே - அந்த பாலயோகி
பேரைச் சொல்லி ஆடுமயிலே
சபரி பீடத்திலும்
ஆடுமயிலே - அந்த சரங்குத்தி
ஆலிலும் ஆடுமயிலே
(ஆடு)
இடும்பனின் சந்நிதி முன்
ஆடுமயிலே - எங்கள் இன்னல் எல்லாம்
தீர்ந்த தென்று ஆடுமயிலே
சோலை அழகு கண்டு
ஆடுமயிலே - அங்கு சுற்றிவரும்
பக்தர் கண்டு ஆடுமயிலே
ஆடுமயிலே - அந்த ஹொமகுண்டம்
முன்னே நீயும் ஆடுமயிலே
(ஆடு)
கருப்பனின் பெரை சொல்லி
ஆடுமயிலே - அந்த காக்கும் தெய்வம்
முன்னே நீயும் ஆடுமயிலே
பதினெட்டுப்படி முன்னே
ஆடுமயிலே - அந்த படிகளில்
நின்று ஆடுமயிலே
கற்பூற ஆழி முன்னே
ஆடுமயிலே - நீயும் கன்னிமூலக்
கணபதியின் முன் ஆடுமயிலே
(ஆடு)
நாகராஜா முன்னே வந்து
ஆடுமயிலே - நீயும் நன்றாய்
தோகை விரித்து ஆடுமயிலே
சரணங்கள் சொல்லிச் சொல்லி
ஆடுமயிலே - நீயும் சந்நிதி
முன்னே வந்து ஆடுமயிலே
காலில் சிலம்பு கொஞ்ச
ஆடுமயிலே - நீயும் அந்தக்
கலியுக வரதன் முன்னே ஆடுமயிலே
(ஆடு)
கற்பூர தீபம் கண்டு
ஆடுமயிலே - அந்த காந்தமலை
ஜோதி முன்னே ஆடுமயிலே
நெய்யாபிஷேகம் கண்டு
ஆடுமயிலே - அந்த நித்ய
பிரம்மசாரி முன்னே ஆடுமயிலே
சந்தனாபிஷேகம் கண்டு
ஆடுமயிலே - அந்த சரவணன்
தம்பி முன்னே ஆடுமயிலே
(ஆடு)
மகர ஜோதி கண்டு கண்டு
ஆடுமயிலே - அவன் மகிமையை
எண்ணி எண்ணி ஆடுமயிலே
எங்கள் மணிகண்ட சுவாமி முன்னே
ஆடுமயிலே - அவர் மனம் குளிர
இன்னும் கொஞ்சம் ஆடுமயிலே
(ஆடு)
No comments:
Post a Comment