Thursday, December 16, 2010

வந்தோமையா சபரி

வந்தோமையா சபரி
வந்தோமையா - கட்டேந்தி
சபரிக்கு வந்தோமையா

  கார்த்திகை நல்ல நாளில்
  மாலையிட்டு - மார்கழித்
  திங்களில் கட்டும் கட்டி

கன்னி மூலக் கண்பதியைப்
பார்த்துக் கிட்டு - கற்பூர
தீபத்தையும் காட்டிக்கிட்டு

(வந்தோம்)

சந்தனப் பொட்டு குங்குமப் பொட்டு
வச்சுக்கிட்டு - சாமி சரணம்
நாம மந்திரம் சொல்லிக் கிட்டு

ஐயப்ப திந்திமிக்கி
   சுவாமியே திந்திமிக்கி
   ஜுகுதாளம் போட்டுக் கிட்டு

(வந்தோம்)

காட்டானை கூட்டத்தை கண்டு கிட்டு
கடுவாய் புலிகளையும் பார்த்துக் கிட்டு

   பம்பை நதி தீரத்திலே குளிச்சிக் கிட்டு
   பகவானைக் கையாலே தொழுதுக் கிட்டு

(வந்தோம்)

படித் தேங்காய் நெய் தேங்காய் கொண்டு கிட்டு
பதினெட்டாம் படிமேலே ஏறிக் கிட்டு

   சுவாமியின் சந்நிதியை கண்டு கிட்டு
   சந்தோஷமாகவே பாடிக்கிட்டு

(வந்தோம்)

உன் அருள் பெறவே வந்தோமையா - உன்
தரிசனம் காணவே வந்தோமையா

(வந்தோம்)

No comments:

Post a Comment