Sunday, December 12, 2010

பம்பை நதி கரையினிலே ( பாடல் )

பம்பை  நதி  கரையினிலே அந்தி வரும் நேரத்திலே
சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கழுத்தில் மணி மாலையோடு
பூ  போலே......
சின்ன விரலசைத்து விழி உருட்டி பார்த்ததே
இந்த உலகத்தையே அழகாக்கி வைத்ததே
2 ( யாருமில்லையே அருகில் தாயுமில்லையே
தேவனைக் காக்க யாரும் தேவையில்லையே )2


2 ( தாயவளும் பாற்கடலில் உருமாறி நின்றாலோ
தந்தையவன் பெருன்கூத்தில் உலகால சென்றானோ )2
ஆதரவும் யாருமின்றி எனைபோல நின்றாயோ
கொடும் பணி காட்டுக்குள்ளே தனியாக வந்தாயோ
கங்கை வந்து நீராட்ட நந்தவனம் பூ சூட்ட
அழகு ஊஞ்சலிலே தொட்டில் கட்டி குயில் பாட 
பசியின்றி பயமின்றி  துயில்பவனே
என் மன்னவனே கண்மணியே ஆரிரோ  .....

2 ( யாருமில்லையே அருகில் தாயுமில்லையே 
தேவனைக் காக்க யாரும் தேவையில்லையே )2


2 ( பந்தளத்து மன்னவனும் கனவோடு வந்தானோ...
ஏழு ஜென்மம் தவம் செய்து உனை கண்டு கொண்டானோ )2
நாளும் தினம் ஏங்குகிறேன் என் வீடு வாராயோ 
போதும் உந்தன் பிறவி என்று எனை ஆள மாட்டாயோ 
பம்பைநதி ஓரமெல்லாம் பித்தம் கொண்டு தெளிகிறேன் 
உன்னை கொஞ்சி ஆதரவாய் முத்தம் தர ஏங்குகிறேன் 
கலி காலம் கரை சேர வந்தவனே 
எனை கொள்ளையிடும் நல்லழகே ஆரிரோ...
2 ( யாருமில்லையே அருகில் தாயுமில்லையே 
தேவனைக் காக்க யாரும் தேவையில்லையே )2

பம்பை  நதி  கரையினிலே அந்தி வரும் நேரத்திலே 
சின்னஞ்சிறு குழந்தை ஒன்று கழுத்தில் மணி மாலையோடு 
பூ  போலே......
சின்ன விரலசைத்து விழி உருட்டி பார்த்ததே 
இந்த உலகத்தையே அழகாக்கி வைத்ததே 
2 ( யாருமில்லையே அருகில் தாயுமில்லையே 
தேவனைக் காக்க யாரும் தேவையில்லையே )2


2 (ஐயனை காக்க யாரும் தேவையில்லையே .... )2


  

No comments:

Post a Comment