Thursday, December 16, 2010

சத்திய ஜோதி தெரியுதையா

சத்திய ஜோதி தெரியுதையா
நித்திய வாழ்வு புரியுதையா
சாஸ்தா ஆலயம் தெரியுதையா
சங்கட மெல்லாம் மறையுதையா

கார்த்திகை மாதம் மாலையிட்டு
காலையும் மாலையும் பூசையிட்டு
இருமுடி தலையில் சுமந்து வந்து - உன்
திருவடி துணையென நாடி நின்றோம்

(சத்திய)

மாமலை ஏறிப் போகையிலே
மனதில் இன்பம் தோன்றுதையா
சபரிக் காட்டில் நடக்கையிலே
சஞ்சலமெல்லாம் மறையுதையா

(சத்திய)

படி பதினெட்டும் ஏறுகையில்
பக்தி எல்லாம் நிறையுதையா
பந்தளக் குழந்தையைக் காண்கையிலே
சிந்தை எல்லாம் மகிழுதய்யா

(சத்திய)

No comments:

Post a Comment