Saturday, December 25, 2010

சலாம் அலேக்கும் வாவரே ( வாவர் பாடல் )

சலாம் அலேக்கும் வாவரே  சலாம் அலேக்கும்
சலாம் அலேக்கும் வாவரே  சலாம் அலேக்கும்

வாவரையா வாவரையா வாரும் ஐயா
வாவரையா வாவரையா வாரும் ஐயா

வாவரையா வாவரையா வாரும் ஐயா
அவர் வில்லாளி வீரனின் தோழரய்யா

அல்லா நாமம் சொன்ன வாவரையா
அவர் அரபியிலே  பிறந்த வாவரையா

கடற் கூட்ட தலைவரே வாவரையா
ஐயனுடன் போரிட்ட வாவரையா

சாஸ்தாவிடம் சரணடைந்த வாவரையா
சபரி வாஸன் தோழரே வாவரையா

இஞ்சிப்பாறை கோட்டையிலே வாவரையா
முண்டனை வென்று வந்த வாவரையா

எரிமேலி பேட்டைத் துள்ள வாவரையா
முதலில் உன்னையே தொழுதிடுவோம் வாவரையா

சர்க்கரை மிளகும் தந்திடுவாயே
தர்காவில் உன்னைத் தொழுபவர்க்கே

மாதவனின் மைந்தனை வாவரையா
காண எங்களோடு வந்திடுவாய் வாவரையா

சபரிமலைக் கோயிலிலே வாவரையா
உன் சன்னதியை தொழுதிடுவோம் வாவரையா



சலாம் அலேக்கும் வாவரே  சலாம் அலேக்கும் 
சலாம் அலேக்கும் வாவரே  சலாம் அலேக்கும் 

No comments:

Post a Comment