Thursday, December 16, 2010

பச்சை மயில் வாகனனே

பச்சை மயில் வாகனனே
பால சுப்ரமண்யனே வா - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே

பழனிமலை ஆண்டவனே
பஞ்சாமிர்தப் பிரியனே வா - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே
                                                                                                (பச்சை)
திருச்செந்தூர் வேலவனே - உன்
திருவருள் தாராயோ - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே

மருதமலை ஆண்டவனே
மனமிரங்கி வாராயோ - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே
                                                                                                 (பச்சை)

சுவாமிமலை ஆண்டவனே
சுவாமி நாத சுவாமியே - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே

வலம்புரி வேலவனே
வள்ளி மணாளனே வா - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே
                                                                                                 (பச்சை)
குன்றக்குடி ஆண்டவனே
குறைகளெல்லாம் தீர்ப்பவனே - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே

எட்டுக்குடி ஆண்டவனே
எங்கள் குறை தீர்ப்பவனே - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே
                                                                                      
                                                (பச்சை)

No comments:

Post a Comment