பச்சை மயில் வாகனனே
பால சுப்ரமண்யனே வா - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே
பழனிமலை ஆண்டவனே
பஞ்சாமிர்தப் பிரியனே வா - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே
(பச்சை)
திருச்செந்தூர் வேலவனே - உன்
திருவருள் தாராயோ - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே
மருதமலை ஆண்டவனே
மனமிரங்கி வாராயோ - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே
(பச்சை)
சுவாமிமலை ஆண்டவனே
சுவாமி நாத சுவாமியே - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே
வலம்புரி வேலவனே
வள்ளி மணாளனே வா - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே
(பச்சை)
குன்றக்குடி ஆண்டவனே
குறைகளெல்லாம் தீர்ப்பவனே - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே
எட்டுக்குடி ஆண்டவனே
எங்கள் குறை தீர்ப்பவனே - என்
இச்சை யெல்லாம் உந்தன் மீதே
வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே
(பச்சை)
No comments:
Post a Comment