உன் அன்பொன்றே வேண்டும்..!
மனிதரும் வலிதரும் யாதொன்றும் வேண்டாம்
அம்மாஉன் அன்பொன்றே வேண்டும்
களிதரும் கன்னியே என்னுள்ளே நீயே
என்றென்றும் ஒளிவீச வேண்டும்
பனிதரும் பிறைசூடன் இடப்பாகம் கொண்டாய்
அவனுக்குன் வலப்பாகம் தந்தாய்
ஆதியே பரமனில் பாதியாய் ஆனாய்
சோதியென ஒன்றாகி நின்றாய்
நஞ்சுண்ட சிவனையே கருநீல கண்டனாய்
ஆக்கியே காத்திட்டாய் அம்மா
வினையென்னும் உரவினை உண்டுண்டு வீழ்ந்தேன்
எனையும்நீ காக்கவே வேண்டும்
என்இதயக் கோவிலில் நீஇருக்க வேண்டும்
உன்னைத்தினம் பூஜிக்க வேண்டும்
பண்பாடி புகழ்பாடி அருள்நாடி அதுவே
வாழ்வெனவே வாழ்ந்திருக்க வேண்டும்!
No comments:
Post a Comment