நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண ........
கார்த்திகை பிறந்தது உனக்காக
நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண
2 ( மணிகண்டனே உன் மலர் முகம் பார்த்து ) 2
வருவேன் வாழ்வினில் பலன் சேர்த்து
என் இருமுடி பாரம் இறக்கி வைத்து
கார்த்திகை பிறந்தது உனக்காக
நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண
கோரஸ் : 2 ( ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ) 2
பூ மரத்து நிழல் பார்த்து ஓய்வாக நான் சாய்ந்தேன்
அடடா அது ஓர் இலையுதிர் காலம்
வானத்து குடை கிழே பசும் புல்லின் பாய் மேலே
படுத்தேன் அது ஓர் அடை மழை காலம்
குரும்பானேன் புயல் காலம்
துளிர் விட்டேன் வெயில் காலம்
இறைவா உன் துணை வேண்டும் கை கூடும் கார்காலம்
இருமுடி சுமந்து நடந்திடுவேன்
பெருவழி பாதையை கடந்திடுவேன்
பரம் பொருள் உன்னை நாடிடுவேன்
வரும் துயர் யாவும் தீர்த்திடுவேன்
கார்த்திகை பிறந்தது உனக்காக
நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண
கோரஸ் : 2 ( ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ) 2
இல்லாத வறியோர்க்கு பொருள் அள்ளி தருகின்ற
நல்லோர் வாழ்ந்தது கரி காலம்
இருக்கின்ற உயிருக்கு விலை பேசி திரிகின்ற
வஞ்சகர் நடை போடும் கலி காலம்
பணம் இருந்தால் நிகழ் காலம்
2 ( பகை வந்தால் போர் காலம்
அய்யா உன் அருள் இருந்தால் ஒளி வீசும் எதிர்காலம் )2
சரணம் சொல்லி பாடிடுவேன்
சபரிமலையினில் ஏறிடுவேன்
பதினெட்டு படியில் தவம் கிடப்பேன்
தரிசனம் கண்டே திரும்பிடுவேன்
கார்த்திகை பிறந்தது உனக்காக
நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண
கோரஸ் : 2 ( ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ) 2
No comments:
Post a Comment