உன்னையன்றி எவருமில்லை...
உன்னையன்றி எவருமில்லை
உள்ளந்தன்னில் திறனுமில்லை
முள்ளிலிட்ட சேலை போலே
நானும் ஆகினேன் – அம்மா
உள்ளிருக்கும் உன்னைத் தேடி
கானம் பாடினேன்
உன்னைப் பாடும் பாடல் எல்லாம்
காற்றில் கரைந்து போகுதோ?
இல்லை யுன்னைத் தேடி வந்துன்
பாத மலரில் சேருதோ?
என்றன் கண்ணின் ஈரம் என்று
உன்னை வந்து நனைக்குமோ?
உன்றன் அன்பின் ஈரம் என்று
என்னை வந்து அணைக்குமோ?
ஏதும் அறி யாத பிள்ளை
உன்மடி யைத் தேடுது
பாதம் பற்றிக் கொண்டு நீயே
சொந்தம் என்றுபாடுது!
No comments:
Post a Comment