Tuesday, December 14, 2010

ஆளரவும் இல்லப்பா நீ காட்டிலே ( பாடல் )

நீலி மலையோ...... கரிமலையோ.....
கள்ளரோ....  பாயும் பொருள் விளங்கோ....
ஐயப்பனை நம்பியே உலவுவேன்....
எனை என்ன செய்வான் அந்த காலனே .....

2 (ஆளரவும் இல்லப்பா நீ காட்டிலே
வீடு மறந்தோடிவரும் கூட்டமே )2
2 ( சொர்க்கம் ஏழும் நேரில் வந்த போதிலே )2
கண்கள் உந்தன் சந்நிதானம் தேடுதே

ஆளரவும் இல்லப்பா நீ காட்டிலே 
வீடு மறந்தோடிவரும் கூட்டமே

ஆ ..... ஆகும் இருட்டில் கொடுமலைக் காட்டில் சரண கோஷம் கேட்குதே 
2 (பட்டபகலில் இடரும் பாதம்  இருளில் நடந்து போகுதே )2
2 ( பொய்யில்லாத நாற்ப்பது நாள் நோன்பிலே... ) 2
பாதை எங்கும் மெத்தை வந்து போடுதே 
ஆளரவும் இல்லப்பா நீ காட்டிலே 
வீடு மறந்தோடிவரும் கூட்டமே

ஆ... 2 ( கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற வார்த்தை பொய்யடா...) 2
பக்தியோடு போகும் வழியில் கல்லும் முள்ளும் ஏதடா...
2 ( சலனமின்றி சரணம் சொல்லும் போதிலே....) 2
ஒரு நல்ல சேதி வந்து விழும்  காதிலே...

ஆளரவும் இல்லப்பா நீ காட்டிலே 
வீடு மறந்தோடிவரும் கூட்டமே

ஸ்வாமியே...... சரணம் ஐயப்போ..
ஹரிஹர சுதனே..... சரணம் ஐயப்போ..
எங்குல தெய்வமே... சரணம் ஐயப்போ 


ஆ... தேவ தேவ உன் மாளிகைக்குள்ளே ஏழைக்  குரலும்  கேட்குதோ....
2 ( செய்த பாவம் கூக்குரல் தனயே வந்து வந்து தடுக்குதோ... ) 2
2 ( பாவம் என்று அறிந்து  நான் செய்யலே... ) 2
அதை சொல்ல சொல்ல துக்கம் கொஞ்சம் தாங்கலே..
கொள்ளைக்கார வாவரையே நண்பனாய் .....
கொண்டவரே நல்லவரே ஓடி வா....
கொண்டவரே நல்லவரே ஓடி வா.... 

ஆளரவும் இல்லப்பா நீ காட்டிலே 
வீடு மறந்தோடிவரும் கூட்டமே
சொர்க்கம் ஏழும் நேரில் வந்த போதிலே 
3 (கண்கள் உந்தன் சந்நிதானம் தேடுதே )3
சாமியே சரணம் ஐயப்பா 
சாமியே சரணம் ஐயப்பா 
சாமியே சரணம் ஐயப்பா 

       *** ஸ்வாமியே சரணம் ஐயப்பா ***

1 comment:

  1. i was searching for this album for a while, please can you remind me the naem of this singer and the album where this aiyappan song is available?

    ReplyDelete